திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதை நிறுத்தக் கோரியும், சம்பூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நாசம் விளைவிக்காதே, சூழல் மாசுபடுவதற்கு எதிராக மக்களே அணிதிரள்வீர் போன்ற கோசங்களை எழுப்பியவாறு இன்று(25.06.2016) காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இவ் ஆர்ப்பாட்டத்தில், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.












