சுவாதி கொலையை தடுத்திருக்க வேண்டும் : வேடிக்கை பார்த்தவர்கள் மீது குஷ்பு ஆவேசம்!!

651

Swathi Murder

குற்றம் செய்வது மட்டுமல்ல, குற்றத்தை தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதும் குற்றம் தான் என்று நடிகை குஷ்பு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி கூலாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளான்.

இதை தடுக்க எவரும் முன்வரவில்லை என்பது தான் சோகம். இந்த கோர சம்பவத்திற்கு பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு குற்றத்திற்கு சாட்சியாக இருந்து கொண்டு அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் குற்றச் செயலுக்கு சமமானதே. அங்கு யாராவது ஒருவர் முன் வந்து அந்த கொலைகாரனைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.