கடந்த 23.06.2016 அன்று பாவற்குளம் மஸ்ஜித் புனித ரமழான் இப்தார் நிகழ்வானது மாகொல அனாதைகள் இல்லத்தின் நிதி பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கே.காதர் மஸ்தான் (பா.உ, வன்னி அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்) கலந்து கொண்டிருந்தார்.
மேலும் நிகழ்வுக்குரிய ஏற்பாட்டினை பா உ மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு பா உ அவர்களின் பிரத்தியேக செயலாளர், ஊடக செயலாளர், அலுவலக அதிகாரி மற்றும் நிறுவன பிரதிநிதிகளும் பெருமளவிலான ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.














