அல்-மதார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு கலாசாரத்தை கட்டியெழுப்புதலும் மதநல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் விளையாட்டு கழகத்தின் தலைவரும் முன்னால் நகரசபை உறுப்பினருமாகிய அப்துல் பாரி தலைமையில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (25.06.2016) நோன்பு திறக்கும் வைபவம்(இப்தார்) சிறப்புற நடைபெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கல்விமான்கள், உலமாக்கள் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.









