திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி பாடசாலையொன்றில், 10ம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டிலுள்ள 50 மற்றும் 55 வயதுடைய இருவரையே கந்தளாய் தலைமைய பொலிஸின் சிறு குற்றத் தடுப்பு பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.06) இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிறுமி வயிற்றுவலியெனத் தெரிவித்து பெற்றோருடன் கந்தளாய் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
அவரை, சோதனைக்குட்படுத்திய போது இரண்டு மாத கர்ப்பம் என தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சிறுமி, கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.






