சுவாதி கொலை சம்பவம் : சிக்கியது கொலையாளியின் புதிய வீடியோ!!

682

swathi-killing

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியியலாளர் சுவாதி வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியின் புதிய வீடியோ ஒன்று சிக்கியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம்ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இன்போசிஸ் நிறுவத்தில் பணி புரிந்து வந்த சுவாதி என்ற இளம் பெண் பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அனைவரின் முன்னிலையில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை நடந்து 2 தினங்கள் ஆகிவிட்ட நிலையில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.

சென்னையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொறுத்தப்படாமலேயே உள்ளன. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திலும் கமரா இல்லை.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும் கொலையாளியை அடையாளம் காண்பதில் பொலிசாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை கேமரா இருந்திருந்தால் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அது பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கும்.

இதனையடுத்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்பது பற்றி பொலிசார் ஆய்வு செய்தனர்.

அப்போது இளைஞர் ஒருவர் டிராவல் பேக்குடன் வேகமாக நடந்து செல்லும்காட்சி பதிவாகி உள்ளது. இவன் தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்கிற சந்தேகத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர் கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதிய வீடியோ ஒன்று பொலிசாரின் கையில் சிக்கியுள்ளது.

அதில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. 2வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் இளைஞர் அதே பகுதியில் உள்ள 7வது வீதி வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.