எனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு களங்கம் விளைவிக்காதீர்கள் : சுவாதியின் தந்தை வேண்டுகோள்!!

1104

Swathi-1

எனது மகளின் புகைப்படங்களை உலாவவிட்டு தேவையில்லாத கட்டுக்கதைகளை எதற்காக வெளியிட்டு வருகிறீர்கள் என சுவாதியின் தந்தை K.சந்தான கோபாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது தலைநகரையே உலுக்கியுள்ளது.

இந்த கொலைக்கு ஒருதலைக்காதல் காரணமாக இருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுவாதியின் தந்தை K.சந்தான கோபாலகிருஷ்ணன் பேசியதாவது, எனது மகளின் உயிர் பிரிந்த பின்னர், அவளது புகைப்படங்களை வெளியிட்டு, வதந்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அவள் கொலை செய்யப்பட்ட இடத்தில் அவளது அடையாள அட்டையும், கைகடிகாரமும் கிடைத்துள்ளது, எனது மகளின் மரணத்தால் எங்கள் குடும்பம் மிகவும் வருத்தத்தில் உள்ளது,

ஆனால் இந்த கொலை குறித்து தகவல்கள் தெரிவிப்பதற்கு யாரும் முன்வரவில்லை, தேவையில்லாமல் எனது மகளின் புகைப்படத்தினை வெளியிட்டு அவளின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.