பிரிட்டனில் மறுதேர்தல் நடத்த மக்களின் ஆதரவு 30 லட்சமாக உயர்வு!!

1338

EU

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற மனுவுக்கு 30 லட்சம் பிரிட்டன் வாசிகள் ஆதரவு அளித்துள்ளனர்.

பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் வில்லியம் ஆலிவர் ஹீலே என்பவர் ஒரு மனுவை பதிவேற்றினார். அந்த மனுவில் ’வாக்குபதிவானது 75 சதவீதத்திற்கு குறைவாகவும், விலகுவது அல்லது இணைந்திருப்பது என்பதற்கான வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பொதுவாக்கெடுப்பில் 72.2 சதவீதம் வாக்கு பதிவானது, விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு பதிவேற்றப்பட்டு 48 மணிநேரத்திற்குள்ளாக 3,048,000 லட்சம் பேர், இந்த மனுவிற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

பிரிட்டன் பாராளுமன்ற சட்டப்படி ஒரு மனுவிற்கு ஆதரவாக ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டால், அந்த மனு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் செய்யவேண்டும்.

மறுவாக்கு பதிவு கோரும் இந்த மனுவிற்கு 30 லட்சத்திற்கு அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் இந்த மனு குறித்து விவாதிக்கப்படும் என்று கன்சர்வேடிவ் எம்.பி., பென் ஹவ்லெட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.