இலங்கையில் புகைத்தல் பழக்கமுடையவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

862

Smoking

இலங்கையின், மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைத்தல் பழக்கமுடையவர்களாக இருப்பதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

2020ல் புகையிலையில்லா இலங்கை என்ற தொனிப்பொருளில் சுகாதார கல்விப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், 20ஆம் நுற்றாண்டின் இறுதி வரை புகையிலையினால் உலகில் 100 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

வெண்சுருட்டில், 700 வகையான இரசாயன பதார்த்தங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 69 வகையான இரசாயன பதார்த்தங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.

மேலும் 250 இரசாயனங்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. சுமார் 55 தொடக்கம் 60 வரையான புற்றுநோயாளிகள், புகைப்பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 23.4 வீதமானோர் இலங்கையில் புகைப்பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.

இதேவேளை, மாணவர்களில் 3 வீதமானோருக்கு புகைத்தல் பழக்கம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.