பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் போக்குரத்துச் சேவைகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று திங்கட்கிழமை(27.06.2016) முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று திங்கட்கிழமை காலை முதல் வவுனியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்
இன்று (27.06.2016) காலை 10.30 மணியளவில் வவுனியா தனியார் பேரூந்து தரிப்பிடத்திலிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை தொடரணியாகச் சென்ற பேரூந்துகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே தரித்து இ.போ.ச இணைந்த தனியார் நேர அட்டவனை எங்கே?, மாகாண அரசே உரிய அதிகாரத்தை பெற்று எமது தனியார் போக்குவரத்து சேவையினை சீர் செய், நல்லாட்சி அரசே தனியார் போக்குவரத்தினை ஒதுக்காதே என பல்வேறு பாதாகைகனை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் வவுனியா தனியார் போக்குவரத்தின் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜேஸ்வரன் அவர்களினால் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருச்செல்வம் திரேஸ்குமார் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.



































