
சிங்கப்பூர் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது என்ஜின் தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து அதிலிருந்து 241 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ற விமானம் 222 பயணிகள் மற்றும் 19 விமான குழுவினருடன் இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி அதை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.




