வவுனியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு, வவுனியா விவசாயிகளின் பணிப்புறக்கணிப்பினை முன்னிட்டு வவுனியா நகர் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகம், வவுனியா இ.போ.சபை பேரூந்து தரிப்பிடம் போன்றவற்றில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.










