வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைத்துத் தருமாறு கோரி இன்று காலை ஆரம்பமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மற்றும் நேரில் சென்ற சிறிரேலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா ஆகியோர் இன்று (27.06.2016) மாலை கூடிய வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் ஆகிய இணைந்து எடுத்த தீர்மானத்திற்க அமைவாக எதிர்வரும் வியாழக்கிழமை வவுனியா வரும் வடமாகாண முதலமைச்சர் அவர்களை சந்தித்து நேரடியாக சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி வவுனியா தாண்டிக்குளத்தில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான முடிவினை எற்படுத்தித் தருவதாக அளித்த வாக்குறுதியை அடுத்து இன்றைய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6.40 மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது.
















