தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை 2016ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.
இறுதிக்கட்டப் போரின்போது பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து கஸ்ரப்படும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவுக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியில் இருந்து வவுனியா ஸ்ரேசன் வீதியில் உள்ள விவசாயத் திணைக்களத்தில் வைத்து விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மின்சார நீர்இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவுடன் வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள், அலுவல உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.















