வவுனியா நெடுங்கேணி ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு பிரதீபனின் வன்னி பட்டறையால் “கல்வி பயிலும் மாணவர்களுக்கான சிறந்த வழி காட்டல்” எனும் தொனிப் பொருளிலில் 20000 பெறுமதியான பட் ,கரபந்து, உதைபந்து என விளையாட்டு பொருட்களும், 2009.02.01 இல் புதுக்குடியிருப்பில் செல் வீச்சில் தந்தையை இழந்து இந்த வருடம் நடைபெறும் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை எடுப்பார் என அதிபரால் சிபாரிசு செய்யப்பட்ட மாணவி ப.தரணிகா என்ற ஆண்டு 5 இல் கல்வி கற்று வரும் மாணவிக்கு துவிச்சக்கரவண்டியும் நேற்று (27.06.2016) பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் கு.விமலேந்திரன், விளையாட்டு பொறுப்பாசிரியர் கு.கோபிநாத், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), வன்னி பட்டறை அமைப்பின் லது, ரிச்சி ஆகியோருடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.




























