மாணவர்கள் அடித்ததால் தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்!!

521

Hangதிருநெல்வேலியில் மாணவர்கள் தாக்கியதில் அவமானம் தாங்காமல் ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். அவர் தனது வகுப்பில், தான் கொடுத்த வகுப்புப் பாடத்தை முடிக்காத 20 மாணவர்களை திட்டியுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவர்கள் குடிபோதையில் சுப்பிரமணியனின் வீட்டுக்கு சென்று அவரை காரில் அழைத்துச் சென்று அடித்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன், தனக்கு நேர்ந்த அவமானத்தை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர், மேலும் மற்ற மாணவர்களை தேடி வருகிறன்றனர்.