மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 குழந்தைகள் திடீர் பலி!!

297

Babyமேற்கு வங்க மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட 15 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலிகுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தாயின் ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைந்த குழந்தைகள், குறைப்பிரசவம், நோய்க்கிருமி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாள் தோறும் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், 24 மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 குழந்தைகள் பலியானதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.