ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வாகனத்தை ஏற்றி மோதிய பொலிஸார் : அதிர்ச்சி வீடியோ!!

288

protest

பிலிப்பைன்சில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் வாகனத்தை விட்டு தாறுமாறாக ஏற்றிய கொடூரக்காட்சி வெளியாகி உள்ளது.

அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத் தளத்தை அப்புறப்படுத்தக்கோரி மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதையடுத்து ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாரின் வேனை தாக்கி சேதப்படுத்தினர்.

அப்போது பொலிசார் பொலிஸ் வேனை போராட்டக்காரர்கள் மீது ஏற்றி மோதி சென்றனர். இந்தக் காட்சி இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.