பல்லினத் தன்மையை மற்றும் பல்லினத் தன்மையின் அழகை இரசிப்போம்” எனும் கல்வியமைச்சின் கருப்பொருளுக்கமைவாக வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழாவானது அதிபர் திரு.செ.பவேந்திரன் அவர்களின் தலைமையில் கடந்த (11.01.2017) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் கெண்டாடப்பட்ட இவ்விழாவில் தைப்பொங்கல் தொடர்பான சிறப்பான பல கருத்துக்கள் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் எடுத்துக் கூறப்பட்டன.