வவுனியாவில் சம்பள அதிகரிப்பு கோரி கிராம சேவையாளர்கள் இரண்டு நாள் பணிப் பகிஸ்கரிப்பு!!

444

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் நேற்றும் இன்றும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் சேவையினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். குறித்த பணிபகிஸ்கரிப்பானது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.