காதலித்த மகளை கொலை செய்த தாய் : மரண தண்டை வழங்கிய நீதிமன்றம்!!

272

 
பாகிஸ்தானில் காதலித்து திருமணம் செய்த மகளை கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததை அறிந்துள்ளார். இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.

இவ்வாறு காதல் செய்வதற்கு சம்மதம் பெற்றோர்கள் தெரிவிக்காதமையினால், கடந்தாண்டு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

சிறிது காலம் சென்றதும் அவரது தாயார் மற்றும் சகோதரர் இணைந்து திருமண ஏற்பாடுகள் உங்களுக்கு செய்துள்ளதாகவும் உங்கள் இருவரையும் ஏற்றுக்கொள்வதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.

தாயின் பேச்சினை ஏற்றுக்கொண்டு சென்ற இவர்களை தாய் மற்றும் சகோதரும் கடுமையாக தாக்கிய பின்னர் மகளை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து உயிருடன் எரித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் அவரது சகோதரனும் கைது செய்யப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிபதி தாயாருக்கு மரண தண்டனையினையும், அவரது சகோதரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.