பெண்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட விமான ஆசனங்களை பெண் பயணிகளுக்கு வழங்க எயார் இண்டியா நிறுவனம் முன்வந்துள்ளது.
விமானப் பயணங்களின்போது பெண்கள் பலர் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனியாகப் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எயார் இண்டியா நிறுவனம் விரும்புகிறது என அந்நிறுவனத்தின் பொது முகாமையாளர்களில் ஒருவரான மீனாக் ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் தேசிய விமான சேவை என்ற வகையில், பெண் பயணிகளின் சௌகரியத்தை மேம்படுத்துவது எமது பொறுப்பு என நாம் கருதுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குள் சேவையில் ஈடுபடும் எயார்பஸ் ஏ 320 ரகத்தைச் சேர்ந்த தனது விமானங்களில் இவ்வார இறுதியிலிருந்து இத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக எயார் இண்டியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத் திட்டத்தின்படி, விமானங்களின் சிக்கன வகுப்புப் பிரிவில் முன்வரிசையிலுள்ள 6 ஆசனங்கள் பெண்களுக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் இந்த ஆசனங்களைக் கோர லாம். இதற்காக மேலதிக கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தனது ஏனைய விமானங்களிலும் இத் திட்டம் அமுல்படுத்தப்படும் என எயார் இண்டியா நிறுவனம் தெரிவித்துள்ளது.