காதலன் மீது அசிட் வீசிய இளம்பெண்!!

460

பெங்களூரில் திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் அசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லிதியா (வயது 26) என்பவர் பெங்களூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரும், துணி வியாபாரியான ஜெயக்குமாரும் (30) கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் லிதியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயக்குமாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. அப்போது ஜெயக்குமார் திருமணத்துக்கு மறுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர் லிதியாவை சந்திப்பதையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் லிதியாவை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய ஜெயக்குமார் முயற்சித்ததாக தெரிகிறது. இதை அறிந்து லிதியா அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் தன்னை ஏமாற்ற நினைத்த ஜெயக்குமாரை பலி வாங்க லிதியா திட்டம் தீட்டினார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜெயக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை தனது ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்ற லிதியா, ஜெயக்குமார் மீது அசிட் வீசினார்.

மேலும், ஜெயக்குமாரின் முகத்தில் பிளேடால் சரமாரியாக கீறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் ஜெயக்குமாரின் முகம் ரத்த வெள்ளமாக மாறியது.

இதையடுத்து ஜெயக்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று லிதியாவை கைது செய்தனர்.

திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் அசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.