வவுனியாவில் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கை!!

250

வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேப்பங்குளம் பகுதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10.30 மணியிலிருந்து 12மணிவரையும் அப்பகுதியில் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதையடுத்து அப்பகுதி மக்கள் சிறிது பதட்டத்திற்குட்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது..

நேற்றைய தினம் இரவு வேளை தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கருகில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதேவேளை புதையல் தோண்டப்பட்டதிற்கான அடையாளங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை வரை பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது