200 இளம்பெண்களை பலாத்காரம் செய்தேன் : ஐ.எஸ் தீவிரவாதி பகீர் வாக்குமூலம்!!

263

ஈராக் நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டில் செயல்பட்டு வந்த ஐ.எஸ் தீவிரவாதியான Amar Hussein(22) என்பவனை அந்நாட்டு பொலிசார் கடந்த 15ம் திகதி கைது செய்துள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதியிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அப்போது, 14வது வயதிலேயே ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைய வேண்டும் என முயற்சி செய்து கடந்த 2013ம் ஆண்டு தான் சேர்ந்தேன். இதே ஆண்டு முதல் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி இதுவரை 500க்கும் மேற்பட்ட வரை கொன்று குவித்துள்ளேன். உயிரிழப்புகளை அதிகளவில் ஏற்படுத்தும் தீவிரவாதிக்கு தலைமை அதிகளவில் சலுகைகளை வழங்கும்.

இந்த வகையில், ஈராக் நாட்டு சிறுபான்மை இனத்தவரான யாஸிதி பெண்களை பலாத்காரம் செய்ய என்னுடைய தலைமை அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய இடத்தில் வசித்து வந்த யாஸிதி இளம்பெண்களை பலாத்காரம் செய்துள்ளேன். இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளேன்.

இந்த குற்றங்களுக்காக தான் இப்போது சிறையில் வருந்துகிறேன்.
இத்தனை ஆண்டுகள் செய்த பாவத்தை தீர்த்துக்கொள்ள தற்போது புனித நூலான குரானை நாள்தோறும் படித்து வருகிறேன்’ என தீவிரவாதி தெரிவித்துள்ளான்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி அளித்த இந்த வாக்குமூலம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.