பிரான்சில் பயங்கரம்..மர்ம நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூடு : 3 பேர் படுகாயம்?

285

பிரான்சில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் லில்லி பகுதியில் உள்ள Porte d’Arras என்ற இடத்திற்கு அருகில் பொதுமக்கள் பலர் இருந்த நேரத்தில் இரவு 9.45 மணி அளவில் மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்திய நபர், தாக்குதல் நடத்திய பின் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாகவும், மற்ற இருவருக்கும் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அப்பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இச்சம்பவத்தால் காயமடைந்திருப்பவர்களை பொலிசார் உடனடியாக Saint-Vincent-de-Pau என்ற மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டால் பிரான்சில் உள்ள முக்கியமான பகுதிகளை பொலிசார் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்

சமீபத்தில் தான் பிரித்தானியாவின் லண்டன் நகரில் தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.