ரோபோக்களால் இங்கிலாந்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம்!!

325

சகல துறைகளிலும் நுழைந்துள்ள ரோபோ எனும் எந்திர மனிதன் திறமையுடன் பணிபுரிந்து வருகின்றான். ஆனால், இந்த நிலை நீடிக்குமாயின் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவடையும் நிலை ஏற்படும்.

இங்கிலாந்தைப் பொறுத்த வரை 30 சதவீதம் பணிகளை ரோபோக்கள் செய்து வருகின்றன. இவற்றின் செயற்பாடுகளால் இன்னும் 15 வருடங்களில் அங்கு ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவிதமான அதி நவீன தொழில்நுட்ப ரோபோக்கள் உருவாகி வருகின்றன. அவை தொழிலாளிகளின் பணியிடங்களைப் பறிக்கும் அபாயம் உள்ளதாக பி.டபிள்யூ.சி. என்ற ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் 22 இலட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ஆனால், ரோபோக்கள் வருகையால் அவற்றில் 10 இலட்சத்து 20 ஆயிரம் பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் நிலை உருவாகியுள்ளது.