செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய சுனாமி!!

593

செவ்வாய் கிரகத்தின் மீது பாரிய விண்கல் ஒன்று மோதியதில் செவ்வாயில் மிகப் பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டதாக விண்வெளி ஆராச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் பாரிய விண்கல் ஒன்று மோதியதில் உருவான மிகப் பெரிய பள்ளத்தை அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பேசிய ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடலில் 150 மீற்றர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாகவும் உப்புடன் கூடிய தண்ணீரும் ஏனைய சிதைகளும் நீண்ட தரை பகுதி நோக்கு பரவியது.

செவ்வாய் கிரகம் வறண்ட மற்றும் எதுவும் இல்லாத தரையாக இருக்கும் என நாம் அறிந்திருந்தாலும் அங்கு மிகப் பெரிய கடல் பிராந்தியம் இருந்திருந்தால், அதனை சார்ந்து வாழ்ந்த உயிரினங்களும் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.