விபத்தில் சிக்கிய சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு!(காணொளி)

257

கார் விபத்தொன்றில் சிக்கிய இரண்டு சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

மெண்டி வைட் (42) என்ற பெண் பொப்பி (5) மற்றும் டெய்லர் (1) ஆகிய தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.

ஒரு நாற்சந்திக்கருகில், பக்கவாட்டில் வந்த கார் ஒன்று எதிர்ப்புறம் வந்த மற்றொரு காரின் பின்புறம் மோதியது. மோதுப்பட்ட கார் சுழன்று சென்று எதிர்ப்பக்கம் நடந்து வந்துகொண்டிருந்த மெண்டி வைட் மற்றும் அவரது பிள்ளைகள் மீது மோதியது.

மோதிய வேகத்தில் மெண்டி வீசுப்பட்டு விழுந்தார். அவரது பிள்ளைகள் இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர். எனினும் தெய்வாதீனமாக மூவரும் எவ்விதக் காயமும் இன்றி உயிர் தப்பினர்.

விபத்து பற்றித் தெரிவித்த மெண்டி, கார் மோதிய வேகத்தில் தனது குழந்தைகள் இருவரும் உடல் நசுங்கியிருப்பார்கள் என்று தாம் பயந்ததாகவும், தெய்வாதீனமாக இருவரும் உயிர் தப்பியதைக் கண்டு தாம் பெரும் ஆறுதல் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.