பெற்ற தாயை கொன்று ரத்தத்தில் படம் வரைந்தது ஏன் : மகன் பகீர் வாக்குமூலம்!!

601

பெற்ற தாயை கொன்று ரத்தத்தில் ஸ்மைலி வரைந்தது ஏன் என்று மகன் பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை குழுவில் உள்ள மும்பை கர் பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானேஷ்வரின் மனவைி கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தீபாலியின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தை வைத்து ஸ்மைலி வரையப்பட்டிருந்தது, வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் மாயமாகியிருந்தது.

சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான இவர்களின் மகன் சித்தாந்தை(வயது 21) பொலிசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ராஜஸ்தானில் வைத்து சித்தாந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், பிஎஸ்சி தேர்வை நான் எழுதாமல் விட்டுவிட்டேன். ஆனால், அம்மா தொடர்ந்து என்னிடம் மார்க்ஷீட்டை கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனால் தற்கொலை செய்ய நினைத்திருந்தேன், ஆனால் அம்மாவுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. கோபத்தில் கத்தியால் குத்திவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளான்.