பிரதமர் மோடியை திருமணம் செய்யப் போவதாக  சபதம் ஏற்று போராடும் பெண்!!

360

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. 40 வயது நிரம்பிய இவர் கடந்த ஒரு மாதமாக ஒரு வித்தியாசமான கோரிக்கையுடன் ஜந்தர் மந்தரில் போராடி வருகிறார்.

அவரது போராட்டத்திற்கு காரணமாக அவர் கூறுவது இந்தியா முழுக்க உள்ள மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் ” திருமணம் செய்தால் பிரதமர் மோடியைதான் திருமணம் செய்வேன், எனக்கு அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் , அதற்காகவே நான் இங்கு போராடி வருகிறேன் ” என்று அனைவரிடமும் கூறி வருகிறார். இது பலரது கவனத்தை அவரது பக்கம் திருப்பி உள்ளது.

மோடியை மணக்க சபதம் ஏற்று இருக்கும் இந்தப் பெண்மணி ஏற்கனவே திருமணம் ஆனவர். இவருக்கு 20 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இப்போது இந்த ஓம் சாந்தி சர்மா கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

பிரதமர் மோடியும் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார், அதே போல் நானும் வாழ்ந்து வருகிறேன் . எனவே பிரதமர் மோடியை நான் திருமணம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. என்னை திருமணம் செய்துகொள்ள பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் . ஆனால் எனக்கு பிரதமர் மோடியை திருமணம் செய்ய மட்டுமே விருப்பம் ” என்று கூறியுள்ளார்.

மோடியை ஏன் திருமணம் செய்ய நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ” எனக்கு பிரதமர் மோடியின் பணமோ, புகழோ தேவை இல்லை. அவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் சேவை செய்கிறார், எனவே அதற்கு கைமாறாக அவருக்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன். என்னை சிலர் பைத்தியம் என்று கூறுகிறார்கள் எனக்கு அதை குறித்தெல்லாம் கவலை இல்லை ” என்கிறார்.

இதேபோல் பிரதமர் மோடியின் மீதுள்ள அதீத அன்பை வெளிப்படுத்த பரிசு கொடுக்கும் திட்டம் ஒன்றிலும் இவர் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறிய போது ” எனக்கு சொந்தமாக ஜெய்ப்பூரில் கொஞ்சம் நிலமும், பணமும் இருக்கிறது . அதை வைத்து பிரதமர் மோடிக்கு நல்ல பரிசு ஒன்று வாங்கித் தரலாம் என்று இருக்கிறேன் ‘ என கூறியுள்ளார்.

ஜந்தர் மந்தரில் யாரும் போராடக் கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளதால் இவர் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.