சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது!!

378

 
ஜப்பான் சுனாமியால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் ஒன்று அரிய வகை பொக்கிஷங்களுடன் அமெரிக்காவில் கரை ஒதுங்கியுள்ளது.

உரிமையாளர் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத குறித்த கப்பலில் goose barnacles எனப்படும் அரியவகை கடல் உயிரனங்கள் நிறைந்திருந்துள்ளது.

கடலில் நீண்ட ஆறு ஆண்டுகள் பயணப்பட்ட அந்த உடைந்து நொறுங்கிய கப்பலில் goose barnacles குவிந்திருப்பதை மக்கள் வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அதிக விலைக்கு விற்கப்படும் குறித்த கடல் உணவானது கிடைப்பதற்கு அரியது எனவும், மிகுந்த போராட்டங்களுக்கு பின்னரே உரிய மக்கள் தேடி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2011 சுனாமியில் சிக்கிய குறித்த கப்பலானது உடைந்த பின்னர் 6 முதல் 8 மாதங்களுக்கு முன்னர் ஹவாய் தீவுகளில் கரை சேர்ந்திருக்கலாம் எனவும், பின்னர் சுமார் 14 மாதங்களில் பயணப்பட்டு அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரை பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.