வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சை முடிவுக்கு வந்தது : 3 மணி முதல் அரச பேரூந்துகள் சேவையில்!!

645

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று இன்று பிற்பகல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒதுக்கப்பட்ட பகுதி போக்குவரத்துச் சபையினரிடம் வழங்கப்பட்டது.

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிறைவுக்கு வந்தது என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.

தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே போராட்டம் கைவிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இ.போ. ச பேருந்து சேவைகள் வடக்கு முழுவதும் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ப.ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ஜெயலோரன்ஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து தலமையக உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர், வவுனியா இ.போ.ச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இரு தரப்பினரும் சேவையாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர்.