வவுனியா தபால் நிலையத்தால் கவனிக்கப்படாமல் கிடக்கும் தபால் பெட்டி!!

322

vavuniya

வவுனியா தபால் நிலையம் கவனத்தில் எடுக்காமல் விட்ட தபால் பெட்டி ஒன்றால் மக்கள் சிரமத்தை எதிர்கொள்ளுகிறார்கள் இது வவுனியா உள்வட்ட, வெளிவட்ட வீதியில் பொதுவாக அமைந்துள்ள தபால் பெட்டி பல காலமாக உடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் அப்பிரதேச மக்கள் கடிதம் அனுப்ப வேண்டுமாயின் பிரதான தபாலகத்திற்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இது பற்றி பல தடவை தபால் அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை உடைந்த தபால் பெட்டிக்கு அருகில் இரு வங்கிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.