பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு..!

302

commonபொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்யும் அரச தலைவர்களது போக்குவரத்து காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று சில மணித்தியாலங்கள் அவ்வப்போது மூடப்படவுள்ளது.

இதன்படி இன்று காலை 8.30 தொடக்கம் முற்பகல் 9.00 மணிவரையும் முற்பகல் 9.45 முதல் முற்பகல் 10.15 மணி வரையும் கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையூடான மக்கள் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்படவுள்ளது.

மாலை நேரத்தில் 6.30 மணி தொடக்கம் 7 மணி வரையும் இரவு 10.30 மணி தொடக்கம் 11 மணி வரையும் கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையூடான மக்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

இதேவேளை களனி பாலத்திலிருந்து பொரளை கனத்த சந்தி வரை பேஸ்லைன் வீதி, கனத்த சந்தியிலிருந்து பம்பலப்பிட்டி வரையான பௌத்தாலோக மாவத்தை, பம்பலப்பிட்டியிலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான காலியூடான மக்கள் போக்குவரத்து மேற்குறித்த நேரத்தில் தற்காலிகமாக தடை செய்யப்படவுள்ளது.