மலேசிய விமானம் திசை திருப்பப்பட்டதா : பரபரப்புத் தகவல்!!

320

Fli

மலேசிய விமானம் கடைசி நேரத்தில் விமானியால் திசை திருப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் 777 ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தை கடைசி நேரத்தில் புரட்சி படையினரின் ஆதிக்கம் உள்ள பகுதி வழியாக விமானி திசை திருப்பியுள்ளார்.ஆனால் விமானி பாதையை மாற்றியதற்கான காரணம் அறியப்படவில்லை.

இந்நிலையில் விமானம் வழக்கமான பாதையில் செல்லாமல் வேறு திசை நோக்கி வந்ததால், இதனை உளவு பார்க்கும் விமானம் என கருதி புரட்சிப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மேலும் விமானத்தின் பாதையை தாங்கள் மாற்றச் சொல்லவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மலேசிய விமானமும், உக்ரைன் விமானமும் சேர்ந்து பறந்ததாகவும், இரு விமானத்தின் சமிஞ்சைகள் ஒரே மாதிரியாக இருந்ததால் மலேசிய விமானத்தை உக்ரைன் இராணுவ விமானம் என்று நினைத்து புரட்சிப் படையினர் தாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.