வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும், தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த உலக அமைதி தினம் 21.09.2014 ஞாயிறு காலை 7.30 மணிக்கு வவுனியா குட்ஷெட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாட்டுடன் இடம் பெற்றது .
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய தலைவரும், இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் பிரதமகுருவுமான சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாதகுருக்கள் தலைமையில் இடம் பெற்ற இந்த பூசை நிகழ்வுகளில், கருமாரி அம்மன் கோவில் பிரதமகுருவும், அந்தணர் ஒன்றிய செயலாளருமான சிவஸ்ரீ பிரபாகர குருக்கள், அந்தணர் ஒன்றிய பொருளாளர் ராஜ்மோகன் சர்மா, ஆதி விநாயகர் ஆலய பிரதம குருவும் அந்தணர் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினருமான சிவஸ்ரீ திவாகர குருக்கள், ஆலய பரிபாலன சபை தலைவர் திரு .மஞ்சுநாதன், பல்கலைகழக மாணவி அனோஜா, கஜி போட்டோ உரிமையாளர் சுரேன், இறைபணி செம்மல் வை.சே.தேவராசா, மக்கள் சேவை மாமணி திரு நா.சேனாதிராசா, சமுக ஆர்வலர்கள் திருமதி ஜெயரூபி, தட்சணாமூர்த்தி, விஜேந்திரன் இவர்களுடன் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ) கவிஞர் மாணிக்கம் ஜெகன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
கருமாரி அம்மன் கோவில் பிரதமகுருவும் அந்தணர் ஒன்றிய செயலாளருமான சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் நெறிபடுத்தலில்
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுக்கு பின்னர்
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய தலைவரும் இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் பிரதமகுருவுமான சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாதகுருக்கள் ஜெய ஜெய ஜெய சக்தி ,ஓம் ஸ்ரீ ஜெய ஜெய சக்தி ,ஜெய ஜெய என பாடி பணிந்தோம் ,ஜெகம் எங்கும் அமைதியை தா என கருமாரி அம்மனை வழிபட்டு பூசையுடன் மக்களின் அமைதிக்காக வேண்டிக்கொண்டார்.
பஞ்ச புராணத்தை இறைபணி செம்மல் வை.சே.தேவராசா பண்ணோடு பாடி விசேட அமைதி பூசை வழிபாட்டுடன் ,கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கலுடன் காலை 8.00 மணிக்கு பூசை வழிபாடுகள் நிறைவு பெற்றன .
மாலை 4.00 மணிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் கருமாரி அம்மன் கோவில் பிரதமகுருவும் , அந்தணர் ஒன்றிய செயலாளருமான சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் ,அந்தணர் ஒன்றியபொருளாளர் ராஜ்மோகன் சர்மா ,ஆகியோருடன் ,தூய ஆவியானவரின் ஆலய குருவானவர் ஜெபசெல்வன் அவர்களும் இணைந்து மத பிரார்த்தனையும் அமைதி கருத்துரைகளையும் வழங்கினர்.
நிகழ்வில் சந்திரகுமார் (கண்ணன் ),மாணிக்கம் ஜெகன் ,ரோய் ஜெயக்குமார் ,கிறிஸ்தோபர் ,கவிஞர் ஐங்கரன் ,கவிஞர் வன்னியூர் நிசான் ,யோகநாதன் ,செட்டிகுளம் பிரதேசபை உறுப்பினர் சிவம் உட்பட சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் சந்திரகுமார் (கண்ணன் ),மாணிக்கம் ஜெகன் ,ரோய் ஜெயக்குமார் ஆகியோர் அமைதியின் தேவை பற்றி உரையாற்றினர். நிகழ்வு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது .
மேலும் ரோய் ஜெயக்குமார் ஏற்பாட்டில் 21.09.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு தூய ஆவியானவரின் ஆலயத்தில் ஆலய குருவானவர் ஜெபசெல்வன் அவர்களினால் மக்களுக்கு அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றமை குறிபிடத்தக்கது .