ஒருநாள் பொலிஸ் கமிஷ்னரான 10 வயதுச் சிறுவன்!!

311

BOy

ஹைதராபாத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவன் சாதிக் ஒருநாள் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த சாதிக் என்ற சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சிறுவனுக்கு காவல்துறை ஆணையராக வரவேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.

இதனை அறிந்த “ஆசையை நிறைவேற்றும் அறக்கட்டளை” முன் வந்து சிறுவனின் நிலை குறித்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த கனவை மாநகர காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி நிறைவேற்றியுள்ளார்.

எனவே நேற்று ஒரு நாள் மட்டும் சாதிக் காவல்துறை ஆணையராக காவல்துறை உடை அணிந்து கொண்டு காவல்துறை ஆணையர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

அப்போது சிறுவனுக்கு காவல்துறை ஆணையர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி கூறியுள்ளார்.

மேலும், காவல்துறை ஆணையராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரவுடிகளைப் பிடிக்க வேண்டும் என்று அந்த சிறுவன் மகிழ்ச்சியோடு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.