பிணவறைவில் 11 மணிநேரத்திற்குப் பிறகு எழுந்து டீ கேட்ட மூதாட்டி!!

300

paati

போலந்து நாட்டில் பிணவறையில் இருந்த மூதாட்டி ஒருவர் 11 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் எழுந்து தேநீர் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலாந்தை சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் (91) என்ற மூதாட்டி சுவாசிக்காமல் இருந்ததால், அவரது உறவினர் ஒருவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெனினா இறந்துவிட்டதாக அறிவித்ததையடுத்து, அவரது உடலை ஊழியர்கள் பிணவறையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சுமார் 11 மணி நேரத்திற்கு பிறகு, மற்றொரு உடலை வைப்பதற்காக ஊழியர்கள் பிணவறைக்கு வந்தபோது ஜெனினா பிணவறையில் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவர்களைப் பார்த்ததும் அமர்ந்திருந்த ஜெனினா, குடிப்பதற்கு தனக்கு சூடாக தேநீர் வேண்டும் என கேட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மருத்துவர்கள் ஜெனினா நலமுடன் இருப்பதை உறுதி செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.