வவுனியாவில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

811

hang

வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில் தூக்கிட்டு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திடீர் மரணவிசாரணை சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த இளைஞன் வீட்டின் தாவரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த உடை போடுவதற்கான கொடிக் கயிற்றினால் தூக்கிட்டு மரணமடைந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் மொரிஸ் டிசாந்த் (30) என்பவராவார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாயார் விடிந்ததும் வெளியில் வந்து பார்த்த போதே மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்துள்ளது.

வெளிநாடு ஒன்றில் வசிக்கும் குறித்த இளைஞனின் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடே தூக்கிட காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.