கணவனுக்காக ஒரு வயது மகளை விற்க முயன்ற தாய்!!

267

சீனாவில் கணவனின் உயிரை காப்பாற்றுவதற்காக, பெற்ற மகளையே தாய் விற்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பஸ்ஹூ நகரில் ஜூவோ குய்சிங்கின்-நீ குவாங்(Zhou Xinggui-Ni Qiong) என்ற தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான ஜூவோ கடந்த 11ம் திகதி தான் பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக கட்டிடத்திலிருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு முதுகில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் நீகுவாங்கிடம் இல்லாததால், கணவரின் மருத்துவச் செலவிற்காக தனது ஒரு வயது மகளை விற்க முடிவு செய்தார்.

இதன்பின் பஸ்ஹு நகர சாலையில் மண்டியிட்டபடி, எனது கணவரின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் யாராவது என் ஒரு வயது மகளை எடுத்துக் கொண்டு பணம் தாருங்களேன் எனவும் கெஞ்சியுள்ளார்.

இதை பார்த்த சில நபர்கள் ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளனர், இச்செய்தியைப் பார்த்த பொதுமக்களில் சிலர், தற்போது ஜூவோங்கின் சிகிச்சைக்காக நிதி அனுப்பி வருகின்றனர்.

baby baby1 Baby2 Baby3