வவுனியா புளியங்குளத்தில் பழையவாடி அ.த.க பாடசாலையில் வறுமை நிலையில் கற்றல் செயற்பாடுகளை கிராமமாக கொண்டு செல்ல முடியாத நிலையில் இருந்த 30 மாணவர்களுக்கு புத்தக பை உட்பட கற்றல் உபகரணங்கள் நேற்று 27.01.2015 திருமதி ச.சாந்தநாயகி நற்பணி மன்றத்தின் சார்பில் லண்டனில் வசிக்கும் அவரது மகன் நிசாந்தனின் நிதி உதவியுடன் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பழையவாடி அ.த.க பாடசாலையின் அதிபர் திரு அரவிந்தன், சமூக ஆர்வலர் திரு செ.சபாநாதன், ஊடகவியலாளர் திரு ந.கபிலநாத், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.