ஆளில்லா விமானங்கள் மூலம் தேர்வுகளை கண்காணிக்கும் சீனா!!

508

Exam

முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு ஆளில்லா விமானங்கள் மூலம் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை கண்காணிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா.

சீனாவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்வில் வெற்றி பெறும் பொருட்டு மாணவர்கள் பல்வேறு அதிநவீன தொழில் நூட்பங்களை பயன்படுத்தி முறைக்கேடுகளில் ஈடுப்படுகின்றனர்.

எனவே இதனை தடுக்கும் வகையில் உயர் தொழில்நுட்ப ரேடியோ கண்காணிப்பு கருவிகள் அல்லது ஆளில்லா விமானங்களை தேர்வு நடைபெறும் மையங்களில் பறக்கவிடப்பட்டு தேர்வுகள் கண்காணிக்கப்படுகிறது.