இலஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே அதிகாரி அடித்து கொலை!!

302

2010906846railwayஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கோரக்பூரில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்த இளம் ரயில்வே இன்ஜினீயர் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பணியில் மிக நேர்மையாகவும் கண்டிப்பும் நிறைந்த 31 வயது கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கோரக்பூரில் இவர் வசித்து வந்த வீட்டில் முகம் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சகோதரர் பிபின் குமார், பொலிசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ´ ´தனது சகோதரருக்கு லோக்கல் மாபியாவிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது. ரயில்வேயில் தேவையற்ற இரும்பு பொருட்களை டெண்டர் எடுக்க ஒரு மாபியா கும்பல் முயற்சித்தது. ஆனால் அந்த கும்பலுக்கு சாதகமாக செயல்பட எனது சகோதரர் மறுத்து விட்டார்.

அந்த கும்பல் லஞ்சம் கொடுக்கவும் முன்வந்தது. ஆனால் எனது சகோதரர் அதனை ஏற்கவும் மறுத்து விட்டார். இதனால் அந்த மாபியா கும்பல்தான் எனது சகோதரரை கொடூரமாக அடித்து கொன்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.