அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!!

767

668228255USஅமெரிக்காவில் ஓரேகான் மாகாணத்தில் கல்லூரி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்லூரியில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது வகுப்புக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களை நோக்கி கண்மூடித்தனமாக அந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.