வவுனியாவில் 11வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!!

1197

Abuse

வவுனியா சாஸ்திரிகூளாங்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை 11வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இரு சந்தேக நபர்கள் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் நேற்று வவுனியா பொலிசாரால் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.