ஹரியானாவில் துப்பாக்கியை தலையில் வைத்திருப்பது போல் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவன், எதிர்பாராத விதமாக தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா அருகே உள்ள பதன்கோட் நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், செல்ஃபி எடுக்க முயன்றுள்ளான்.
கைத் துப்பாக்கியை தலையில் வைத்தவாறு செல்ஃபி எடுக்க ஆசைபட்ட அவன், ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தையின் கைத் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளான்.
அப்போது செல்போனில் உள்ள பட்டனை அழுத்துவதற்கு பதிலாக, துப்பாக்கியை தெரியாமல் அழுத்தியதால் சிறுவன் பலத்த காயமடைந்துள்ளான்.
வீட்டில் பெற்றோர்கள் இல்லாததால், தகவல் அறிந்த உறவினர்கள் அச்சிறுவனை மருத்துவமனையில் உடனடியாக சேர்த்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அச்சிறுவன் செல்ஃபி எடுத்தபோது அவனது சகோதரி உடன் இருந்துள்ளார். தற்போது இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.