நடிகர் ஷாருக் கானும் நடிகை கஜோலும் மிகப் புகழ்பெற்ற பொலிவூட் சினிமா ஜோடியினர். இவர்கள் இணைந்து நடித்த தில்வாலே துல்ஹானியா லே ஜயாங்கே (டி.டி.எல்.ஜே), குச் குச் ஹோதா ஹை, கபீ குஷி கபி கம், பாஸிகர் முதலான திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றவை. நீண்ட காலத்தின் பின் இவர்கள் இணைந்து நடித்த தில்வாலே படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகியது.
மிக நெருங்கிய நண்பர்களாக இவர்கள் விளங்குகின்றனர். எனினும் கஜோலுக்கும் ஷாருக் கானுக்கும் இடையிலான முதல் சந்திப்பு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கவில்லையாம்.
1993 ஆம் ஆண்டு வெளியான பாஸிகர் திரைப்படத்தில் தான் இவர்கள் முதன் முதலில் இணைந்து நடித்தனர். அப் படத்தில் கஜோலுடன் ஷாருக்கான் நடிக்க ஆரம்பித்தவுடன் நடிகர் அமீர் கானும் கஜோலுடன் படமொன்றில் இணைந்து நடிக்க விரும்பம் தெரிவித்து, அவரின் நடிப்பு குறித்து ஷாருக்கானிடம் விசாரித்தாராம்.
அப்போது, “கஜோல் மிக மோசமானவர். பணியில் கவனம் செலுத்துவதே இல்லை. நீங்கள் அவருடன் இணைந்து பணியாற்றுவது கடினம்” என நான் தெரிவித்தேன்.
ஆனால், அன்று மாலை படமாக்கப்பட்ட காட்சிகளை ரஷ் போட்டு பார்த்தபோது, அமீரை தொலைபேசியில் அழைத்து, “என்னவென்று தெரியவில்லை, அவர் (கஜோல்) திரையில் அற்புதமாக இருக்கிறார்” தான் கூறியதாக ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.






