
பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார்.
நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள், “யாரடி நீ மோகினி”, “குங்குமப் பூவே” உள்ளிட்ட பல திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பல தலைமுறை ரசிகர்களை தனது இனிமையான குரலால் கவர்ந்த ஜமுனா ராணியின் மறைவு, இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





