தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் அவரது கணவரால் உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஈத்தாமொழி பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சுபலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் மூலமே அவரின் கணவர் ஹரிதாஸ் குற்றவாளி என தெரியவந்துள்ளது.
ஈத்தாமொழி பகுதியில் சேர்ந்த ஹரிதாஸ்-சுபலெட்சுமி தம்பதிக்கு குழந்தை இல்லை. ஹரிதாஸ், சுபலெட்சுமியிடம் அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சுபலட்சுமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, சம்பவத்தின் அன்று இரவு படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன்.
அதிகாலை மூன்று மணியளவில் கழிவறை சென்றேன். அப்போது வெளிப்புறமாக கழிவறையை பூட்டிய எனது கணவர், என் மீது மண்ணெண்னை ஊற்றி தீ வைத்தார்.
தீயின் வெப்பம் தாங்க முடியாமல் நான் வலியால் அலறினேன்.எனது சத்தத்தை கேட்டு அருகில் இருப்பவர்கள் யாரேனும் வந்துவிடுவார்கள் என பயந்து, வீட்டில் தீவிபத்து நடந்தது போல் காட்டி, என் கணவர் என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்.” என தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ஹரிதாசை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






